முதலமைச்சருடன் இந்தோனேஷிய அதிகாரிகள் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்தோனேஷிய நாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

Update: 2018-11-23 12:49 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்தோனேஷிய நாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசினர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது வரும் ஜனவரி மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் அழைப்பிதழை, இந்தோனேசிய அதிகாரிகளிடம் முதலமைச்சர் வழங்கினார். தமிழகத்தில் அதிகம் முதலீடு செய்ய இந்தோனேஷியர்கள் முன்வர வேண்டும் என்று, அவர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். அதேபோல, இந்தோனேஷியாவில் முதலீடு செய்ய தமிழர்கள் முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்