"தென்னை மரத்திற்கு ரூ.3000 நிவாரணம் வழங்க வேண்டும்" - ஹெச்.ராஜா

கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் - ஹெச்.ராஜா

Update: 2018-11-20 23:50 GMT
கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு  3 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  சபரிமலையின் புனிதத்தன்மையும் பாரம்பரியத்தையும் காத்திட வலியுறுத்தி காரைக்குடியில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதித்த பகுதிகளில்  குடிநீர், மின்சார வினியோகத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்