ராசிபுரம் : தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழப்பு

ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-12 07:05 GMT
ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி என்பவர் கடந்த மூன்று மாதங்களாக தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு விடுதி திரும்பிய அவர் மயக்கமடைந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்