தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள் - பெரணி வகை தாவரத்தை பார்க்க ஆர்வம்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2018-11-12 06:10 GMT
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  வடநாட்டு சுற்றுலா பயணிகள், கல்வி சுற்றுலா மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பூங்காவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள்  வருகை வந்துள்ளனர்.  இதனால்  இரண்டு நாட்களில் மட்டும் 6 லட்சம் ரூபாய் பூங்கவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பெரணி வகை தாவரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்