கீழடி அகழ்வாராய்ச்சி அடுத்தகட்ட நடவடிக்கை : தமிழக தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

கீழடியில் அகழ்வாராய்ச்சியில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-09 12:29 GMT
சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கீழடியில் அகழ்வாய்வு பணியை தொடரவும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியம் அமைக்க வேண்டியும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். 

இந்த மனு விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, கீழடியில் அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சி  மேற்கொள்வது குறித்தும்,  கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 2019ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்