"டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் தயாரிக்க விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தலாம்" - கவிஞர் வைரமுத்து

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-05 09:32 GMT
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதிகார மையங்களில் பயன்படுத்தப்படும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும் என்றும், மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்றால், விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம் என்றும், வைரமுத்து யோசனை தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்