வடகிழக்கு பருவமழை தொடங்கியது - இரவு முதல் பரவலாக மழை

வடகிழக்கு பருவ மழை தொடங்கும்விதமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை பெய்து வருகிறது

Update: 2018-11-01 04:12 GMT
சென்னையில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை  2 மணிநேரம் நீடித்தது. இரவிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், அடையாறு, சைதாப்பேட்டை,  நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம் , உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக தாழ்வான சில பகுதிகளில், சாலையோரம் மழைநீர் தேங்கியது. இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்தது.


புதுச்சேரியில் பரவலாக பலத்த மழை


புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. 
Tags:    

மேலும் செய்திகள்