"மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது " - திருமாவளவன்

'சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-24 14:09 GMT
'சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை இன்னும் நீடிப்பதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கல்வியாளர் வசந்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி  கவிஞர் உமாதேவி, சல்மா, பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் பிரதமர் மோடியால், இந்த இழிவுக்கு முடிவு கட்ட முடியவில்லை என திருமாவளவன் குற்றம் சாட்டினார்.


Tags:    

மேலும் செய்திகள்