சென்னை : காவலர் வீர வணக்க நாள் கொண்டாட்டம்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீர வணக்க நாள் கொண்டாடப்பட்டது.

Update: 2018-10-21 07:29 GMT
சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீர வணக்க நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் போது வீரமரணமடைந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீஷ்துரை உள்பட இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணமடைந்த 414 காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்