4 நாள் தொடர் விடுமுறை : மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

Update: 2018-10-21 06:38 GMT
தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணை உருண்டை கல், உள்ளிட்ட இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. மாமல்லபுரத்தில் போதிய வாகன நிறுத்தமிடம் இல்லாததால் சாலை ஓரத்திலேயே சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால், மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்