கேரளாவில் இருந்து குன்னூருக்கு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான வவ்வால்கள்

தொடர்மழை காரணமாக கேரளாவில் இருந்து குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளன.

Update: 2018-10-20 08:39 GMT
தொடர்மழை காரணமாக கேரளாவில் இருந்து குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளன. குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் ஒரு சில வவ்வால்களே தங்கி இருந்தன. இந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான வவ்வால்கள் அங்கு வந்துள்ளன. பெரிய வவ்வால்கள் அதிக அளவில் வந்து தங்கியுள்ளது இதுவே முதல்முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் பட்டாசுகளை வெடித்து அவற்றை விரட்ட முயற்சி செய்வதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், அவற்றை வனத்துறையினர் கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்