ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-16 11:42 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.  பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்கும் மத்திய அரசின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்