"மஹா புஷ்கர விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர்" - ஹெச்.ராஜா

தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட 12 ரதங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, நெல்லையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டன.

Update: 2018-10-10 05:21 GMT
தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட 12 ரதங்கள்,  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, நெல்லையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டன. ரத ஊர்வலத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, மஹாபுஷ்கர விழா மூலம் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு விடக் கூடாது என எதிர்க்கட்சிகள் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்