எம்.எல்.ஏ.காரை வழிமறித்த பொதுமக்கள் - அடிப்படை வசதிகள் இல்லை என புகார்...

150 வது காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரா பிரபா காரை வழிமறித்த பொதுமக்கள்..

Update: 2018-10-02 23:59 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள அசோக்நகரில், 150 வது காந்தி ஜெயந்தி விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரா பிரபா பங்கேற்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த பொதுமக்கள், அசோக் நகரில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி, எம்.எல்.ஏவை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா, நகராட்சி ஆணையரை அழைத்து உடனடியாக தார் சாலை அமைக்க உத்தரவிட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்