நெல்லை : இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

நெல்லை தச்சநல்லூரை அடுத்த அழகநேரியை சேர்ந்த முனியசாமி என்பவர் ம‌ர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2018-10-01 06:06 GMT
நெல்லை தச்சநல்லூரை அடுத்த அழகநேரியை சேர்ந்த முனியசாமி என்பவர் ம‌ர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வாய்க்கால் கரையில் அமர்ந்திருந்த அவரை திடீரென வந்த மர்ம கும்பல் வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியுள்ளது. சடலத்தை மீட்ட போலீசார், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்