பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி

தேனி மாவட்டம், திம்மரசநாயக்கனூர் பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

Update: 2018-09-30 20:54 GMT
தேனி மாவட்டம், திம்மரசநாயக்கனூர் பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். 

இதனையடுத்து அந்த மையத்தை இரண்டாக பிரித்து அருகேயுள்ள பிள்ளைமுகன்பட்டி கிராமத்தில் புதிய அங்கான்வாடி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் புதிதாக அங்கன்வாடி மையம் துவங்கப்பட்ட இடம், பட்டியல் இனத்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால், பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை அனுப்ப மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. 

பணியாளர்கள்  பலமுறை கேட்டு கொண்ட பிறகும் பெற்றோர் குழந்தைகளை அனுப்பாததால் புதிய அங்கன்வாடி மையத்திற்கு தினமும் 10க்கும் குறைவான குழந்தைகளே வந்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்