அரசு பள்ளிகளை அழகாக்க ஆசிரியர்கள் முயற்சி...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அரசுப்பள்ளிகளை அழகாக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-09-27 14:42 GMT
* திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளை காப்போம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டு வருவதே இந்த அமைப்பின் இலக்காகும். இதன் படி சத்தியமங்கலம் அருகே உள்ள கோடே பாளையம் அரசுப்பள்ளி சுவர்களை, வண்ண வண்ண ஓவியங்களால் அழகாக்கி வருகின்றனர். 

* அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் சூழலை இனிமையாக்குவது, தனியார் பள்ளி மாணவர்களை அரசுப்பள்ளியை நோக்கி வர செய்வது, விடுமுறையை பயனுள்ள முறையில் போக்குவது உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்கள் இதனால் உற்சாகமடைவார்கள் என்பது தலைமையாசிரியரின் கருத்து.

* அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விடுமுறை தினங்களில் குழுவாக சேர்ந்து பள்ளிகளை அழகுப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது. இதனால் தனியார் பள்ளி மோகம் குறைந்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்