மேல்நிலைப் பள்ளிகளில் 1474 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க அரசு அனுமதி

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரத்து 474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-09-27 09:44 GMT
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரத்து 474 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை மாதம் 7,500 ரூபாய் சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்