கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு...

ஓமலூர் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3 இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த விவகாரத்தில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2018-09-24 08:27 GMT
தாத்தியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை கிண்டல் செய்து, பாலியல் தொந்தரவு அளித்த 3 இளைஞர்களை கிராமமக்கள் அடித்து உதைத்தனர். இதனை அறிந்த இளைஞர்களின் உறவினர்கள் மாணவியின் உறவினர்களோடு மோதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த போலீசார், இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மோதலுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்