வெங்கட்ரமணசுவாமி கோயில் புரட்டாசி திருவிழா
கரூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கரூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம், வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய புரட்டாசி திருவிழாவின், முக்கிய நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.