முழு அடைப்பின் போது இயக்கப்பட்ட தமிழக பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தின் போது இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

Update: 2018-09-10 07:57 GMT
போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்காலை நோக்கி கிளம்பிய பேருந்து ஒன்று நெல்லித்தோப்பு அருகே வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்