நாதக-வினர் கைது... தஞ்சையில் பரபரப்பு
தஞ்சையில், அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாகம், அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற சொல்லை தவிர்த்து அரசுப் போக்குவரத்து கழகம் என்று பெயர் மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய நாம் தமிழர் கட்சியினர், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப்பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.