யோகேந்திர யாதவ் கைது: ஸ்டாலின், கமல்ஹாசன் கண்டனம்

யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு, மு.க. ஸ்டாலின் மற்றும் கமல் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-08 16:37 GMT
திருவண்ணாமலையில்  விவசாயிகளின்  கருத்து கேட்க வந்த அகில இந்திய விவசாய சங்கத்தலைவர் யோகேந்திர யாதவை,போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

யோகேந்திர யாதவ் கைது : மு.க. ஸ்டாலின் கண்டனம்

யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  போராடும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்க நினைக்கும் தமிழக அரசு இவற்றிற் கெல்லாம் விரைவில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று தமது சமூக வலைதள பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


யோகேந்திர யாதவ் கைது : கமல்ஹாசன்கண்டனம்

அகில இந்திய விவசாய சங்கத்தலைவர் யோகேந்திர யாதவ், கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், தமிழகத்தில் மக்கள், சுதந்திரமாக கருத்து சொல்லும் சூழலை உருவாக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்