ஸ்ரீரங்கம் கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் ஆய்வு நடத்தினர்.

Update: 2018-09-06 13:22 GMT
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் சிலை சேதம் அடைந்திருப்பதாகவும், சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க  சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்,ஏ.டி.எஸ்.பி ராஜாராம் உள்ளிட்டோர் சக்கரத்தாழ்வார் சன்னதி, மூலஸ்தானம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்