கடை மடை பகுதிகளுக்கு காவிரி நீர்வரவில்லை - விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வரவில்லை எனக் கூறி விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-09-06 11:01 GMT
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வரவில்லை எனக் கூறி விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால், சம்பா பயிர்கள் காய்ந்து வெடிக்க தொடங்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், தேவ ந‌தி மற்றும், வெட்டாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அரசு, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மேலும் போராட்டங்கள் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்