வேளாங்கண்ணி மாதா கோவில் தேர் பவனி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலில் தேர் பவனி நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலில் தேர் பவனி நடைபெற்றது. கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா பத்து நாட்கள்
கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாம் நாள் திருவிழாவான இன்று, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் தேர் பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வர, இருபுறமும் அணிவகுத்து நின்ற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மலர் தூவி பிரார்த்தனை செய்தனர்.