சென்னையில் 5 நாட்கள் மழை தொடரும் - வானிலை மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-08-31 05:39 GMT
காற்றுமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில்  நள்ளிரவு முதல் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், தியாகராயநகர் மற்றும் புறகர் பகுதிகளிலும் நள்ளிரவு தொடங்கிய மழை விடாது பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையோர பள்ளங்களில் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்