விளம்பர பதாகைகள் வைக்க இடைக்கால தடை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொது இடங்களில் விளம்பர பதாகைகளை வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

Update: 2018-08-29 08:45 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொது இடங்களில் விளம்பர பதாகைகளை வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு, இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், அடுத்தக்கட்ட விசாரணையை இரு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்