"மணல் எடுப்பதற்கும், மதகு உடைந்ததற்கும் சம்பந்தமில்லை": வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு
காவிரி நீர் கடைமடை பகுதிவரை சென்றடைந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.;
காவிரி நீர் கடைமடை பகுதிவரை சென்றடைந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணல் எடுப்பதற்கும், முக்கொம்பு கதவணை உடைந்ததற்கும் தொடர்பில்லை என்று கூறினார். நீரின் வேகம் காரணமாகவே மதகு உடைந்தது என்றும், அந்த பகுதியில் விரைவில் புதிய பாலம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.