379வது சென்னை தின கொண்டாட்டம்

சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பாரம்பரிய இடங்களை சுற்றி பார்ப்பதற்காக இரண்டு அடுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

Update: 2018-08-22 13:27 GMT
379 வது சென்னை தினம் ஆகஸ்ட் 22 ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக இரண்டு அடுக்கு பேருந்தை தனியார் நிறுவனம் இயக்குகிறது. 

பேருந்தின் மேல்தளம் திறந்த வெளியாக இருப்பதால், அதில் ஏறி நின்று சென்னையை சுற்றி பார்ப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயணம் செய்த பேருந்து இது என்பதால், இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

வருகிற 26 தேதி வரை இலவசமாக இந்த பேருந்து இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்