வீட்டில் படித்து கொண்டிருந்த மாணவி கடத்தல் - இரண்டு இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஒசூரில் வீட்டில் பாடம் படித்து கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-07 07:08 GMT
ஜீவாநகரில் வசித்து வரும் ஷேக்தாவுத் என்பவரின் மகள் அல்மாஸ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்,வீட்டின் கீழ் தளத்தில் பாடம்படித்து கொண்டிருந்த அவரை, இரண்டு இளைஞர்கள் கடத்தியுள்ளனர்.  இதனை பார்த்த அவரின் சகோதர்கள் கூச்சலிட்டுள்ளனர்.சப்தம் கேட்டு பெற்றோர் கீழே வருவதற்குள் மாணவியை அவர்கள் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்