அதிசய பனிமய மாதா பேராலய 436-வது ஆண்டுத் திருவிழா - மாதா தேர்ப்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Update: 2018-08-06 02:22 GMT
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 436-வது ஆண்டுத் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  11 வது நாளான நேற்று மாலை மறைமாவட்ட ஆயர் இவான் அம்ரோஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாதாவின் சொரூபம் வைக்கப்பட்ட தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி பனிமய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சாதி, மத பேதமின்றி மக்கள் கலந்து கொண்ட நிலையில், மாவட்ட எஸ்.பி.தலைமையில் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்