போலீஸாரிடம் தகராறு...போதை தெளிந்ததும் மன்னிப்பு கேட்ட இளைஞர்

கோவையில், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போக்குவரத்து போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன் பின்னர் போதை தெளிந்ததும், அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Update: 2018-07-29 05:17 GMT
கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்த இளைஞர் சுதர்சன் என்பவரை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், போலீஸாரிடம், உங்கள் பெயர் என்ன, வேலையை விட்டு தூக்கி விடுவேன், குடிபோதையில் வந்தால் என்ன தவறு எனக்கேட்டு, தகராறில் ஈடுபட்டார்.  இதனை அங்கிருந்த பொதுமக்கள், செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கிடையே, சுதர்சன் மீது நான்கு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்