பெண்களுக்கான உடற்கட்டு திறன் வெளிப்படுத்தும் போட்டி
தமிழ்நாடு அமெச்சூர் ஆண் அழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண் அழகன் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு அமெச்சூர் ஆண் அழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண் அழகன் போட்டி பழனி சுப்பிரமணியா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 55 கிலோ, 60 கிலோ என தனித்தனி பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை மதுரையை சேர்ந்த சியாம்கணேஷ் என்பவர் தட்டி சென்றார். இதே போல் முதன் முறையாக நடைபெற்ற பெண்கள் உடற்கட்டு திறன் வெளிப்படுத்தும் போட்டியில் ஜெயா, சினேகா ஆகிய இரண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சினேகா முதல் பரிசும் ஜெயா இரண்டாம் பரிசும் பெற்றனர்.