"ஜெயலலிதா உடல்நிலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது" - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மனு

ஜெயலலிதா உடல்நிலை குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என்பதால், சம்மனை திரும்ப பெறுமாறு ஆடிட்டர் குருமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2018-07-18 15:14 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்தது இல்லை எனவும் அவரது உடல்நிலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் குருமூர்த்தி கூறியுள்ளார். மேலும், தனக்கு அனுப்பிய சம்மனை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த மனுவில் குருமூர்த்தி் கூறியிருப்பதாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்