காதோடு கம்மலை அறுத்து சென்ற திருடர்களுக்கு தர்ம அடி

சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் காதணியை இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காதோடு அறுத்து சென்ற சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.

Update: 2018-07-16 04:54 GMT
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் அங்குள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இருவர், இருசக்கரவாகனத்தில் வந்து சாந்தியின் காதணியை காதோடு அறுத்து சென்றுள்ளனர். 

இதனால் ரத்தம் சொட்ட சொட்ட சாந்தி வலியால் துடித்தார். அவரது அலறல் சத்த‌த்தை கேட்ட அப்பகுதி மக்கள், திருடர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு விசாரித்த‌தில், அவர்கள் ஏலகிரி என்ற கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன், மற்றும் அருண் என்பது தெரியவந்தது. 


Tags:    

மேலும் செய்திகள்