பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு துன்புறுத்தல் - குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்த பொதுமக்கள்

குழந்தையை கடத்த வந்ததாக எண்ணி, பொதுமக்கள் ஒரு பெண்ணை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

Update: 2018-07-06 03:02 GMT
குழந்தையை கடத்த வந்ததாக எண்ணி, பொதுமக்கள் ஒரு பெண்ணை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. எடப்பாடி ஏரி ரோடு அருகே சுற்றிதிரிந்த பெண் ஒருவர், குழந்தைகளை கடத்த கையில் மயக்க மருந்து வைத்திருப்பதாக எண்ணி பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து கைகளை கட்டிபோட்டு, அடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வைத்திருந்தது கண்ணுக்கு பயன்படுத்தும் மருந்து என்று தெரிந்த பின் அவரது ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்