இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி மைதானத்தில் நுழைந்த உடும்பு

Update: 2024-02-04 05:05 GMT

இலங்கையின் கொழும்புவில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் போட்டியின் போது, மைதானத்தில் உடும்பு நுழைந்ததால் சிறிதுநேரம் ஆட்டம் தடைபட்டது. சிறிதுநேரம் ஒய்யாரமாக நடைபோட்டு வேடிக்கை காட்டிய உடும்பு, நடுவர் ஒருவரின் தீவிர முயற்சிக்குப் பின் மைதானத்தை விட்டு வெளியேறியது. இதனையடுத்து போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்