முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-04-19 03:10 GMT
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்காக சென்னையில் இருந்த அவர் நேற்று திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக  சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்