ஐபிஎல் - ராஜஸ்தானுடன் இணைந்த நியூசிலாந்து வீரர் - சுழற்பந்து வீச்சு ஆலோசகராக ஈஷ் சோதி நியமனம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியூசிலாந்து வீரர் ஈஷ் சோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-01-03 11:06 GMT
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் , சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியூசிலாந்து வீரர் ஈஷ் சோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அணி நிர்வாகங்களும் தங்கள் அணியை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் ,
டி -20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக இருந்த ஈஷ் சோதியை ஆலோசகராக நியமனம் செய்துள்ளது. ஈஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. 
Tags:    

மேலும் செய்திகள்