2020 ஒலிம்பிக் : மராத்தான் போட்டி இடம் மாற்றம் - டோக்கியோவிற்கு வெளியே போட்டியை நடத்த முடிவு

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டி நடைபெற இருந்த இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-05 13:12 GMT
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டி நடைபெற இருந்த இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெற உள்ள ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடுமையான வெயில் இருக்கும் என்பதால் போட்டியாளர்களுக்க பாதிப்பு ஏற்படும் என்ற விமர்சனம் எழுந்த‌து. இதையடுத்து, கடந்த புதன் கிழமை நடந்த கூட்டத்தில் அனைத்து மராத்தான் போட்டிகளையும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு வடக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சப்போரா நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்