தோனி மீது முழு நம்பிக்கை வைத்திருந்த ரசிகர் : தோனி ஆட்டமிழந்தவுடன் அதிர்ச்சியில் மரணம்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை பார்த்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Update: 2019-07-12 02:10 GMT
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை பார்த்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கொல்கத்தாவை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் மைதி, போட்டியை தமது செல்போனில் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அப்போது, தோனி ரன் அவுட் ஆனதும் அவர் தரையில் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்