"சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?" - உண்மையை உடைத்த பிரேமலதா விஜயகாந்த் | Udhayanidhi

Update: 2023-09-09 15:05 GMT

சுங்கக் கட்டண உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க சார்பில், சென்னை வானகரம் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இங்கு ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளபோது, சனாதனத்தை கையில் எடுத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்