"தடா பெரியசாமியால் பாஜவுக்கு..." - சரவணக்குமார் பரபரப்பு கருத்து

Update: 2024-03-31 11:54 GMT

தடா பெரியசாமி வெளியேறியதால் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எள்ளளவு பின்னடைவு ஏற்படாது என பாஜக பட்டியலணி மாநிலத் துணைத் தலைவர் சரவணக்குமார் கூறியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், உத்தமன் போல பேசுவதை தடா பெரியசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மூன்று கட்சிகளில் பேசிய பிறகு நான்காவது கட்சியாகத்தான் அதிமுகவில் அவர் ஐக்கியமாகி இருப்பதாகவும், அதிமுக நிர்வாகிகள் வருங்காலங்களில் அதனை புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்