உயர்கல்விக்கு மாணவி கேட்ட உதவி..உடனே நிறைவேற்றிய முதல்வர்

Update: 2023-10-31 11:01 GMT

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாணவி கிருத்திகா உயர்கல்வி தொடர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல துறையின் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, முப்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார். முன்னதாக, கடந்த 18ஆம் தேதி காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மாணவி கிருத்திகா, உயர்கல்வி படிக்க உதவி கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்