மாவோயிஸ்ட் அச்சுறுத்தலையும் மீறி ராகுல் காந்தி தொகுதியில் மக்கள் வாக்களிப்பு

Update: 2024-04-27 02:04 GMT

மாவோயிஸ்ட் அச்சுறுத்தலையும் மீறி ராகுல் காந்தி தொகுதியில் மக்கள் வாக்களிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி, காவல் துறையினரின் பாதுகாப்புடன் பொதுமக்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் அந்த தொகுதியில், இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் வந்த 4 மாவோயிஸ்டுகள், தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று பொதுமக்களை மிரட்டிச் சென்றனர். இதையடுத்து, பதற்றமான அந்த வாக்குச்சாவடியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்ததால், அங்கு 78.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்