"பொய் சொன்னால் காகம் கடித்து விடும்" - பிரதமர் மோடிக்கு ஜெயராம் ரமேஷ் பதில்

Update: 2024-05-01 02:17 GMT

மகாராஷ்டிரா மாநிலம், மாதா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டியிடாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வாக்குகளை ஏன் வீணடிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து பதில் அளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், தான் பெரிய பொய்யர் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்து வருவதாகவும், அவர் பொய் சொன்னால் காகம் கடித்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்