"பயம் பாஜகவுக்கு பயம்... இன்னும் 10,15 நாட்களில் மோடியும், அமித்ஷாவும் .. கவனம் மக்களே.." மேடையில் முழங்கிய ராகுல்

Update: 2024-05-10 11:43 GMT

பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டதாலேயே அதானி, அம்பானி குறித்து பேச தொடங்கியிருக்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, 10 ஆண்டுகளாக அதானி, அம்பானி குறித்து பேசாத மோடி, இப்போது பேசுவதற்கு பயமே காரணம் என கூறினார். இந்தியா கூட்டணி கார்னர் செய்கிறது, தோல்வி நெருங்கிவிட்டது என தனது நண்பர்கள் அதானி, அம்பானியை பிரதமர் மோடி உதவிக்கு அழைக்கிறார் எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாட்டுக்கான வழியை உத்தரபிரதேசம் திறக்கவிருக்கிறது, உத்தரபிரதேசத்திலும், நாட்டிலும் பாஜக தோல்வியை தழுவும், இந்தியா கூட்டணி வெல்லும் எனக் கூறினார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இன்னும் 10, 15 நாட்களுக்கு மக்களை திசைத்திருப்பும் முயற்சியையே மேற்கொள்வார்கள், அதற்கு இடம் கொடுக்காது, தவிர்த்துவிடுங்கள் என கூட்டத்தை நோக்கி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்