கர்நாடகாவில் உதயநிதி பார்முலா..மோடியை தாக்கும் 'சொம்பு' பாலிட்டிக்ஸ் - இறங்கி அடிக்கும் காங்கிரஸ்

Update: 2024-04-20 07:46 GMT

பெங்களூருவில், பிரதமர் மோடிக்கு எதிராக, சொம்பு வைத்து போராட்டம் நடத்த முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அவருக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் சொம்பை வைத்து போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, கர்நாடக அரசு நூறு ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு திரும்ப 13 ரூபாய் தான் கொடுக்கிறது... இதுகுறித்து கேட்டால், பிரதமர் மோடி எங்களுக்கு சொம்பு தான் தருகிறார் என தெரிவித்தார். மேலும், கடந்த 6 மாதமாக வறட்சி நிலவும் கர்நாடகத்திற்கு, வறட்சி நிதியாக 17 ஆயிரத்து 400 கோடி கேட்டோம்... அதற்கும் பிரதமர் மோடி சொம்பு தான் தருகிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்