ஜாபர் சாதிக்.... "முதல்வர் தயங்க மாட்டார்..." - அமைச்சர் பரபரப்பு பேச்சு

Update: 2024-02-26 11:23 GMT

ஜாபர் சாதிக் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, யார் தவறு செய்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் தயங்கவும் மாட்டார் என்றும், அவர்கள் மீதான எந்த நடவடிக்கைக்கும் அரசு தடையாக இருக்காது என்றும் தெரிவித்தார். அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில், மென்பொருள் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டத்தினை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஜாபர் சாதிக் மீதான எந்த நடவடிக்கைக்கும் அரசு தடையாக இருக்காது என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்